search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்ப்ப கால பிரச்சனை"

    • குழந்தையின்மைக்கு பெண்களை மட்டுமே காரணம் சொல்ல முடியாது.
    • ஆண்களிடம் காணப்படும் குறைபாடுகள் குழந்தையின்மைக்கு 35 சதவீதம் காரணமாக இருக்கின்றன.

    குழந்தையின்மைக்கு உடல் நலம், உளநலம், சுற்றுச்சூழல் என பல்வேறு காரணிகள் இருந்தாலும் முக்கியமான காரணம் காலம் தாழ்த்தி திருமணம் செய்து கொள்வதுதான். திருமணம் செய்வதற்கு ஏற்ற வயது 22-ல் இருந்து 25 வயது வரையிலான காலகட்டமாகும். அதுதான் தாம்பத்திய வாழ்க்கைக்கு சிறந்தது. 30 வயதுக்குள் குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அந்த வயதில் தான் பெண்ணின் கரு முட்டைகளும், ஆணின் உயிரணுக்களும் குழந்தை பேற்றுக்கான தரத்துடனும் வீரியத்துடனும் இருக்கும்.

    அந்த பருவத்தில் திருமணம் செய்தால் தான் இயற்கையான கருத்தரிப்பு சாத்தியப்படும். முப்பது வயதுக்கு பின்னர் கருமுட்டை மற்றும் உயிரணுக்களின் வீரியம் குறைந்து கொண்டே வரும். எனவே எக்காரணத்தைக் கொண்டும் திருமணத்தை தள்ளிபோடுதல் கூடாது. குழந்தையின்மைக்கு இது மட்டுமே முழு காரணம் அல்ல. மரபணு ரீதியான குறைபாடுகள், சுற்றுச்சூழல் சீர்கேடு, உடல் மற்றும் உளவியல் ரீதியான பிரச்சினைகள் என பல காரணங்கள் உள்ளன. இது போன்ற காரணங்களால் இன்றைக்கு இயற்கையான முறையில் கருத்தரிக்கும் வாய்ப்பு 2 சதவீதமாக குறைந்துள்ளது. அதாவது 100 தம்பதிகளில் 2 தம்பதிகளுக்கு மட்டுமே இயல்பான குழந்தை பேறு சாத்தியமுள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.

    எனவே திருமணமாகி ஒரு வருடம் ஆன பின்பும் குழந்தை பேறு கிடைக்கவில்லை என்றால் கணவன்-மனைவி இருவரும் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது. பெண்களின் கர்ப்பப் பை, கருமுட்டைப் பை, இவற்றை இணைக்கும் கருக்குழாய் ஆகியன குழந்தைபேற்றுக்கான முக்கிய உறுப்புகளாகும்.கருமுட்டைப் பையில் உற்பத்தியாகும் முட்டையானது கருக்குழாயை வந்தடையும். அங்குதான் ஆணின் உயிரணு வந்து கருமுட்டையினுள் நுழைந்து கருவுறச் செய்யும். 4-5 நாட்களுக்கு பின்னரே கருவுற்ற முட்டை கர்ப்பப் பைக்குள் சென்று குழந்தையாக வளரத் தொடங்கும். இந்த கருமுட்டைப் பை, கருக்குழாய் ஆகியவற்றில் ஏற்படும் குறைபாடுகள் குழந்தையின்மைக்கு 35 சதவீதம் காரணமாக அமைகின்றன. கர்ப்பப்பை பிரச்சினைகள் 20 சதவீதம் காரணமாக அமைகின்றன.

    அதே போல் ஆண்களிடம் காணப்படும் குறைபாடுகள் குழந்தையின்மைக்கு 35 சதவீதம் காரணமாக இருக்கின்றன. அதாவது ஆண்களின் உயிரணுக்கள் வீரியமாக இருந்தால்தான் அது கருமுட்டையை துளைத்துச் சென்று கருவுற செய்ய முடியும். வீரியம் குறைந்த உயிரணுக்களால் சாத்தியமில்லை. சிலருக்கு உயிரணுக்கள் குறைவாக இருக்கும். ஒரு சிலருக்கு உயிரணுக்கள் உற்பத்தி இருக்கும், ஆனால் வெளிவராது.இப்போதெல்லாம் இளைஞர்கள் செல்போனை பேண்ட் பாக்கெட்டில் வைக்கிறார்கள். அதிலிருந்து வெளிவரும் கதிர் வீச்சு ஆண்களின் உயிரணுக்களை பாதிப்பதாக தெரியவந்துள்ளது.

    இது போன்ற பிரச்சினைகள் இருப்பதால் குழந்தையின்மைக்கு பெண்களை மட்டுமே காரணம் சொல்ல முடியாது. மேலும் உடல்சார்ந்த பிரச்சினையில் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இன்றைய காலக்கட்டத்தில் பலருக்கும் மாதவிடாய் சீராய் வருவதில்லை. வந்தாலும் வலி மிகுந்ததாகவே உள்ளது. அது சரியாக இருந்தால் தான் குழந்தைபேறே வாய்க்கும். மாதவிடாய் காலத்தில் வெளியேற வேண்டிய ரத்தம் சிலருக்கு உள்ளே சென்று கர்ப்பபைக்கு பின்பகுதியில் திட்டு திட்டாக படிந்து உறைந்து விடும். சில சமயம் இதுபோன்று முட்டைப்பையிலும் படிந்து விடும். இப்படிபட்டவர்கள் மாதவிடாயின் போது கடும் வேதனைபடுவார்கள். ஈஸ்ட்ரோஜன் அதிகளவில் சுரந்தாலும் கர்ப்பபையில் கட்டி உருவாக வாய்ப்பு உள்ளது. எனவே ஹார்மோன்கள் சுரப்பை சமநிலைபடுத்தும் வகையில் வாழ்க்கை முறையை அமைத்து கொள்ள வேண்டும்.

    அதாவது அதிகம் உணர்ச்சி வசப்படாமலும் பதட்டம் அடையாமலும் அமைத்துக் கொள்ள வேண்டும். மாதவிடாய் சமயத்தில் வைக்கும் நாப்கினை 3 மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும். அதுதான் கிருமித் தொற்று பரவாமல் தடுக்கும். தினமும் தலைக்கு குளிக்க வேண்டும். சிலருக்கு தலைக்கு ஊற்றுவது ஆகாது என்றால் வாரத்தில் 3 நாட்களாவது தலைக்கு குளிக்க வேண்டும். ஆரோக்கியமான கருத்தரித்தலுக்கு பெண்கள் தங்கள் வயது மற்றும் உயரத்துக்கு ஏற்ற வகையில் உடல் எடையை வைத்திருப்பதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். எண்ணெயில் பொரித்த நொறுக்குத்தீனிகள், கொழுப்புசத்து மிகுந்த உணவுகள் அதிகம் உண்பதை தவிர்க்க வேண்டும். உடலுழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உடல் எடை அதிகமான பெண்கள் கர்ப்பம் தரிக்கும்போது சிலருக்கு நீரழிவு நோய் ஏற்படலாம். அது வயிற்றில் வளரும் குழந்தையையும் தொற்றலாம்.

    அதனால் சுகபிரசவத்தில் சிக்கல் ஏற்படலாம். சிலருக்கு குழந்தை பேற்றுக்கு பின்னர் நீரழிவு வரலாம். எனவே உடல் எடையை நார்மலாக வைத்திருப்பதே நல்லது. மேலும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு கரு முட்டை பையில் நீர்கட்டிகள் உருவாக 90 சதவீத வாய்ப்புகள் உள்ளன. ஒல்லியானவர்களுக்கு 10 சதவீத வாய்ப்புதான் உள்ளது. இந்த நீர்க்கட்டிகள் உருவாகுவதற்கும் நீரிழிவு நோய்க்கும் தொடர்பு உண்டு. எனவே பெண்கள் அதற்கு இடம் கொடுக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். இவற்றோடு மனநலமும் முக்கியம். மகிழ்ச்சியான விசயங்களில் மனதை திருப்ப வேண்டும். டென்ஷன் படுவதை தவிர்க்க வேண்டும். இரவு தூக்கத்தை தவிர்க்க கூடாது.

    தூக்கம் கெட்டால் உடலின் இயக்கம் பாதிக்கும். உடல் சூடாகும். அதுவே பல்வேறு நோய்களை வரவழைக்கும். எனவே பகலில் உழைப்பும் இரவில் ஓய்வும் தேவை. இயற்கையான வாழ்வியலை கடைப்பிடிக்க வேண்டும். ரசாயன நச்சு இல்லாமல் விளைவிக்கப்பட்ட தானியங்கள், காய்கறிகள், பழங்களை தேர்ந்தெடுத்து உட்கொள்வது நல்லது. சுகாதாரமான காற்றை சுவாசிப்பது கூடுதல் ஆரோக்கியம். அன்றாடம் உடலுழைப்பு அல்லது உடற்பயிற்சி அவசியம். இப்படியான சூழலில் காலா காலத்தில் திருமணம் செய்து இல்லற வாழ்வை இனிமையாக தொடங்கினால் எல்லோருக்கும் குழந்தை பாக்கியம் நிச்சயம் உண்டு.

    • தம்பதிகள் இந்த விஷயத்தில் தயக்கம் காட்டக்கூடாது.
    • இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி மருத்துவத்துறையில் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளன.

    உங்களுக்கு இருக்கும் குழந்தையின்மை பிரச்சினையை நீங்கள் புரிந்து கொண்டவுடன் டாக்டரை சரியான நேரத்தில் அணுகி உங்கள் பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வு பெற முயல்வது முக்கியம். தம்பதிகள் இந்த விஷயத்தில் தயக்கம் காட்டக்கூடாது. நீங்கள் எப்போது டாக்டரை அணுகவேண்டும் என்பதற்கு இங்கே சில குறிப்புகளை தந்து உள்ளேன்.

    ஆண்/பெண் வயது 35 முதல் 40 இருந்தாலோ, மாதவிடாய் சீராக வரவில்லை என்றாலோ அல்லது மாதவிடாயே ஏற்படவில்லை என்றாலோ, மாதவிடாய் அதிக வலியோடு ஏற்பட்டாலோ கருவுறுவதில் பிரச்சினைகள் இருப்பதை நீங்கள் உணர்ந்தாலோ, உங்கள் குடும்பத்தினரில் யாருக்காவது மரபு வழி கருவுறாமைக்கான பிரச்சினை இருந்தாலோ டாக்டரை அணுகி மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.

    இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி மருத்துவத்துறையில் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளன. இதனால் தீர்க்க முடியாமல் சவாலாக இருந்த பல நோய்களையும் இன்று எளிதாக குணப்படுத்த முடிகிறது. அந்த வகையில் கருவுறாமைக்கான காரணங்களை சரியாக கண்டறிந்து, அதற்கான சிகிச்சை முறையையும் தேர்ந்தெடுத்து உங்கள் பிரச்சினையை சரி செய்து கொள்ள முடியும். அந்த வகையில் பல சிகிச்சை முறைகள் இன்று வழக்கத்தில் உள்ளன.

    இன்விட்ரோ பெர்டிலைஷேசன் (ஐ.வி.எப்.)

    இந்த ஐ.வி.எப். சிகிச்சை முறையில் கருமுட்டைகள் சேகரிக்கப்பட்டு உடலுக்கு வெளியே ஆய்வகத்தில் கருவகத்தட்டில் வைக்கப்பட்டு விந்தணுவுடன் சேர்க்கப்பட்டு கருவுற செய்யப்படுகிறது. இப்போது அதிக மக்கள் இந்த சிகிச்சை முறையில் பயன்பெற்று வருகிறார்கள் என்பது உண்மை.

    இவ்வாறு அன்னை மருத்துவமனை டாக்டர்கள் ஜோ.புல்கானின், பி.ஜி.சுதா ஆகியோர் கூறினார்கள்.

    • கர்ப்ப காலத்தில் தான் பெண்களை பல்வேறு பிரச்சனைகள் பாதிக்கின்றன.
    • உடலில் அரிப்பு உண்டாவது என்பது மிகவும் வேதனைக்கு உரிய விஷயம்..

    கர்ப்ப காலத்தில் தான் பெண்களை பல்வேறு பிரச்சனைகள் பாதிக்கின்றன. கர்ப்பிணி பெண்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் ஒரு பிரச்சனை தான் கர்ப்ப காலத்தில் அரிப்பு உண்டாவது, உடலில் அரிப்பு உண்டாவது என்பது மிகவும் வேதனைக்கு உரிய விஷயம்..

    பொதுவாகப் பெண்களுக்குக் கர்ப்பகாலத்தில் ஐந்து மாதங்களுக்கு மேல் வயிற்றுப் பகுதியின் சருமப் பகுதி விரிவடையும்போது தழும்புகள் ஏற்படும். அப்போது, ஒரு மாதிரியான நமைச்சல் உருவாகி, அரிப்பு ஏற்படும். இதுதான் காரணமே தவிர, வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு முடி அதிகமாக இருப்பதால் அரிப்பு ஏற்படும் என்பதற்கு எந்த அறிவியல் நிரூபணமும் இல்லை.

    அனைத்து கர்ப்பிணி பெண்களும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் இந்த அரிப்பு உண்டாவது.. அரிப்பு உண்டாகும் போது நமக்கு சொறிய வேண்டும் என்று கைகள் துடித்தாலும் கூட, அரிப்பு உண்டாகும் போது சொறியக்கூடாது. இவ்வாறு சொறிந்தால் அரிப்பு அதிகரிக்க தான் செய்யும்.. எனவே மறந்தும் இந்த தவறை செய்து விடாதீர்கள்.

    அரிப்பு உண்டாகும் பகுதிகளை எப்போதும் உலர்வாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். இந்த சதை மடிப்புகள் வயிற்றுப் பகுதிகள் போன்ற இடங்களில் வியர்வை அல்லது குளித்து முடித்த பின் ஈரமாக இருப்பது போன்றவை இருக்க கூடாது. இவை அரிப்பை உண்டாக்கும் என்பதால் உலர்வாக வைத்துக் கொள்ளுங்கள். இதனால் அந்த இடங்களில் கொப்புளங்கள் வருவதை தடுக்கலாம்.

    சில பெண்கள் ஆறாவது மாதத்திலும், சிலர் எட்டாவது மாதத்திலும் இந்த அரிப்புத்தன்மையை உணர ஆரம்பிப்பார்கள். இதுபோன்ற சமயங்களில் குளிப்பதற்கு முன்பு ஆலிவ் எண்ணெய், விளக்கெண்ணெய் போன்றவற்றை வயிற்றுப்பகுதியில் தேய்த்து சிறிது நேரம் ஊறிக் குளித்துவிடலாம்.

    இதனால் அரிப்பு, தழும்பைத் தவிர்க்கலாம். அரிப்பெடுக்கும் நேரங்களில் மேலே சொன்ன எண்ணெயை வயிற்றுப் பகுதியில் தடவியும் வரலாம். சிலருக்குப் பித்தப்பையில் அடைப்பு ஏற்படுவதன் காரணமாகவும் வயிற்றுப் பகுதியில் அரிப்பு ஏற்படலாம். எனவே, அரிப்பு எடுக்கும்போது மருத்துவரிடம் காட்டி அதற்கான தீர்வைத் தேடுங்கள்.

    • உயிரணுக்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தால் குழந்தைப்பேறு தாமதமாகும்.
    • சித்த மருத்துவத்தில் சிறந்த மருந்துகள் உள்ளன.

    உயிரணுக்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தால் குழந்தைப்பேறு தாமதமாகும். தற்போது இளைஞர்கள் மத்தியில் இந்தப்பிரச்சினை அதிகமாக காணப்படுகிறது. இதற்கு சித்த மருத்துவத்தில் சிறந்த மருந்துகள் உள்ளன. அவை:

    1) அமுக்கரா சூரணம் 1 கிராம், பூரண சந்திரோதய செந்தூரம் 100 மி.கி., நாக பற்பம் 100 மி.கி., பவள பற்பம் 100 மி.கி. என்ற அளவில் எடுத்து தினமும் காலை-இரவு, பாலில் கலந்து உணவுக்குப் பின்பு சாப்பிடலாம்.

    2) பூனைக்காலி விதைப் பொடி 1 கிராம் எடுத்து பாலில் கலந்து காலை, இரவு குடிக்கலாம்.

    3) நெருஞ்சில் விதைப் பொடி, நீர்முள்ளி விதைப்பொடி சம அளவில் பொடித்து பாலில் கலந்து சாப்பிடலாம்.

    விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அசைவ உணவுகள்: நாட்டுக்கோழி முட்டை, இறைச்சி, ஒமேகா-3 கொழுப்பு நிறைந்த கடல் சிப்பிகள், சூரை மீன், மத்திச்சாளை மீன்கள்,

    பருப்பு வகைகள்: பாதாம், பிஸ்தா, அக்ரூட் பருப்புகள், பூசணி விதைகள்,

    பழங்கள்: செவ்வாழைப்பழம், நேந்திர வாழைப்பழம், பேரீச்சம் பழம், திராட்சை பழம், பெர்ரி வகைகள், அவகோடா, பலாப்பழம், மாம்பழம், துரியன் பழம், அத்திப்பழம், நாட்டு மாதுளம்பழம்,

    கீரைகள்: பசலைக்கீரை, தூதுவளை, நறுந்தாளி, முருங்கை, அறுகீரை, தக்காளி, புடலங்காய், அவரை பிஞ்சு, முருங்கை பிஞ்சு, முருங்கை காய், பீன்ஸ், பட்டர் பீன்ஸ், கேரட், சர்க்கரை வள்ளி கிழங்கு, உருளைக்கிழங்கு, பனங்கிழங்கு மற்றும் சின்ன வெங்காயம், பூண்டு இவைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். மது, புகைப்பழக்கம் கூடாது.

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய்.ஆர். மானக்சா எம்.டி. (சித்தா)

    • தினமும் குளிப்பது மிக மிக முக்கியம்.
    • ஹார்மோன் மாறுதல்களாலும் தோலில் பாதிப்புகள் ஏற்படலாம்.

    உணவு கருவுற்ற பெண் மூன்று 'G' நிறைய சாப்பிட வேண்டும்.

    Green leaves - கீரை வகைகள்

    Green vegetables - பச்சைக் காய்கறிகள்

    Grains - முழு தானியங்கள்

    முழு தானியங்கள் என்றால் அதிகம் பாலிஷ் போடாத கோதுமை மற்றும் அரிசி சாதம், கஞ்சி போன்றவை நல்லது. புழுங்கலரிசி உபயோகிப்பது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. மல்லிகைப் பூ போன்ற பச்சரிசி சாதம், சத்தில்லாத சக்கைதான். அதிக refine செய்யப்பட்ட ஆட்டா, மைதா போன்றவற்றில் இயற்கையான நார்ச்சத்து இருக்காது.அதிக காரம், மசாலா பொருட்களைத் தவிர்ப்பது நல்லது. கருவுற்ற தாய் நிறையப் பழங்கள் சாப்பிட வேண்டும். இது மலச்சிக்கலைத் தவிர்க்கும். அன்னாசி, பப்பாளி போன்றவை உடலுக்கு நல்லது.

    கருவுற்ற தாயின் தோல் வறண்டு அல்லது அதிக எண்ணெய்ப் பசையாக மாறலாம். இதற்குத் தேவையான மாய்ஸ்சரைஸர்கள் அல்லது லோஷன் பயன்படுத்தலாம். சாதாரண தேங்காய் எண்ணெய் மிகவும் நல்லது. நிறைய கெமிக்கல் அடங்கிய மேல் பூச்சுகளைத் தவிர்ப்பது நல்லது. அவற்றால் ஒவ்வாமை ஏற்பட்டு, அதற்கு சிகிச்சை எடுக்கவேண்டி வந்தால் வீணான மன உளைச்சல்தானே! சிலருக்கு தோலில் ஏற்படும் மாற்றங்கள் பிரசவம் ஆன பிறகு தானாக சரியாகிவிடும். ஹார்மோன் மாறுதல்களாலும் தோலில் பாதிப்புகள் ஏற்படலாம்.

    தினமும் குளிப்பது மிக மிக முக்கியம். தண்ணீர் கிடைத்தால் தினம் இரண்டு முறை! தன் சுத்தம் பேணுதல், தோல் நோய்கள் வராமல் பாதுகாக்கும்.

    புத்துணர்ச்சியையும் தரும்.

    அந்தக் காலத்தில் விசாலமான வீடு, முற்றம், கொல்லை என்று நல்ல காற்றோட்ட வசதி இருந்தது. வெந்நீர் போட வீட்டுக்கு வெளியில் அடுப்பு இருக்கும். அதிலிருந்து வரும் புகை வீட்டுக்குள் அதிகம் வராது. யாருக்கும் பாதிப்பு இருக்காது. இந்தச் சின்ன வீட்டில் புகைமூட்டம் இருந்தால் எல்லோருக்கும் சுவாசக் கோளாறு வரும். அதிலும் கர்ப்பிணிப் பெண்ணுக்கு அதிக பாதிப்பு இருக்கும்.

    • கர்ப்ப காலத்தில், பருக்கள் பெரும்பாலும் வாயைச் சுற்றிலும் கன்னத்திலும் வரும்.
    • கர்ப்ப காலத்தில் பல பெண்கள் உடல் முழுவதும் அரிப்பு பிரச்சனையை சந்திக்கின்றார்கள்.

    பெரும்பாலான பெண்கள் கர்ப்ப காலத்தில் மிகவும் உணர்திறன் வாய்ந்த சருமத்தைக் கொண்டுள்ளனர், இதன் காரணமாக அவர்கள் நீட்டித்த தழும்புகள், அரிப்பு, பருக்கள், நிறமி மற்றும் பிரசவத்திற்குப் பிறகு தோல் தளர்த்தல் போன்ற பல தோல் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

    பருக்கள்: பருக்கள் பிரச்சனை கர்ப்பிணிக்கு மிகவும் எரிச்சலூட்டும் பிரச்சினை. பல பெண்களுக்கும் தடிப்புகள் ஏற்படுகின்றன. புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் அதிகப்படியான சுரப்பு சருமத்தின் உற்பத்தியை அதிகரிக்கிறது, இது சருமத்தின் துளைகளை நிறுத்துகிறது. கர்ப்ப காலத்தில், பருக்கள் பெரும்பாலும் வாயைச் சுற்றிலும் கன்னத்திலும் வரும். பல பெண்களுக்கு அவை முகம் முழுவதும் பரவுகிறார்கள். இவற்றுக்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இவை பிரசவத்திற்குப் பிறகும் நீடிக்கும். சில நேரங்களில் இந்த தழும்புகளும் எஞ்சியிருக்கும். எனவே, மருத்துவரிடம் ஆலோசிக்காமல் வீட்டில் எந்த சிகிச்சையும் செய்ய வேண்டாம். இவற்றின் சிகிச்சைக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகளையும் பயன்படுத்தக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

    மெலஸ்மா: இது கர்ப்ப காலத்தில் ஏற்படும் மிகவும் கடுமையான தோல் பிரச்சினை, இது கர்ப்ப முகமூடி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இடத்தில், முகத்தில் நிறமி ஏற்படுகிறது. சூரியனின் புற ஊதா கதிர்கள் வெளிப்பாடு, பரம்பரை மற்றும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்களின் அளவு அதிகரிப்பதும் இதற்கு முக்கிய காரணங்கள்.

    அரிப்பு: வாய்வு காரணமாக கர்ப்ப காலத்தில் தசைகளில் நீட்சி ஏற்படுகிறது, இதன் காரணமாக பல பெண்களுக்கு அரிப்பு பிரச்சினைகள் ஏற்படுகிறது. பல பெண்கள் கர்ப்ப காலத்தில் உடல் முழுவதும் அரிப்பு பிரச்சனையை சந்திக்கின்றார்கள். எனவே, இதைத் தவிர்க்க, கலமைன் லோஷன் அல்லது நல்ல தரமான மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள். அரிப்பு அதிகமாக இருந்தால் ஒரு மருத்துவரை அனுகவும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் கல்லீரல் தொந்தரவுகளாலும் இது ஏற்படலாம் என கூறப்படுகிறது.

    நீட்டித்த தழும்புகள்: குழந்தையின் வளர்ச்சியுடன் வயிற்றுத் தோல் நீட்டப்படுகிறது, இதன் காரணமாக சருமத்தின் மேற்பரப்பில் காணப்படும் மீள் இழைகள் உடைக்கப்படுகின்றன. இதன் விளைவாக நீட்டித்த தழும்புகள் உண்டாகிறது. கர்ப்ப காலத்தில் அதிக எடை அதிகரிக்கும் பெண்கள் இந்த பிரச்சினைக்கு ஆளாகிறார்கள். இந்த சமையத்தில் 11-12 கிலோ எடை அதிகரிப்பு சாதாரணமானது, ஆனால் சில பெண்களுக்கு 20 கிலோ வரை அதிகரிக்கும். இது சருமத்தில் கூர்மையான நீட்டிப்பை ஏற்படுத்துகிறது, இது நீட்டித்த தழும்புகள் பெறும் அபாயத்தை அதிகரிக்கிறது. வைட்டமின் ஈ கொண்ட மாய்ஸ்சரைசர் அல்லது கிரீம் பயன்படுத்துவதன் மூலம் அவற்றைக் குறைக்கலாம், ஏனெனில் இது சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும்.

    குறிப்பு : மருத்துவம் தொடர்பான எந்தொரு முயற்சியை மேற்கொள்ளும் போதும் உங்கள் மருத்துவரை அனுக மறக்காதீர்...

    • அடுத்த தலைமுறை பக்க விளைவில்லாத நம் பாரம்பரிய மருத்துவ முறையின் வலிமையை அறியும்.
    • குழந்தையின்மை ஒவ்வொரு தம்பதிக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது.

    இன்றைய கால சூழலில் குழந்தையின்மை என்பது ஒவ்வொரு தம்பதிக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. அவற்றுக்கு நம் பாரம்பரிய மருத்துவ முறை மூலமே பல்வேறு தீர்வுகளை தருகிறது. அதற்கு ஓம் மரபுவழி மருத்துவமனை சார்பில் அந்த குறைபாடு இருக்கும் பட்சத்தில் எளிய தீர்வுகளையும் காண்போம்.

    சீரற்ற மாதவிடாய் சுழற்சி: சீரற்ற மாதவிடாய் சுழற்சி குறைபாடு மாறுவதற்கு தினமும் இரவு அத்திப்பழம், பால் சாப்பிடலாம். கருமுட்டை வளர்ச்சி போன்ற காரணிகள் இருப்பின் அதனை சரி செய்ய சித்த மருத்துவத்தில் நல்ல மருந்துகள் உள்ளது.

    கருப்பை (சினைப்பை) நீர்க்கட்டி: சீரற்ற உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் சூழலியல் இதற்கு காரணமாக அமைகிறது. இந்த பிரச்சினை இருந்தாலும் குழந்தை உருவாவதற்கு பெருவாரியாக வாய்ப்பு உள்ளது. ஆனால் சில நேரங்களில் இது பாதிப்பையும் உண்டாக்கும். இந்த பிரச்சினை வராமல் தடுக்க வாரம் இருமுறை எண்ணெய் குளியல், உணவில் தேவையான அளவு துவர்ப்பு சுவை ஆகியவை உதவும். இதனை களைவதற்கும் நம் மருத்துவ முறை மருந்துகளை அளித்துள்ளது. பெரும்பாடு, வெள்ளைப்பாடு, கருப்பை தடிமன், கருப்பை குழாய் அடைப்பு, கருப்பை திசுக்கட்டிகள், புற்று ஆகிய பிரச்சினைகளுக்கும் சித்த மருத்துவம் நல்ல தீர்வை அளிக்கிறது. ஆண்களுக்கு ஏற்படும் விந்தணு நீந்தும் தன்மை குறைபாடு நீங்க பாதாம் பிசினை தினமும் இரவு பாலில் முருங்கை பிஞ்சு, பூ உணவில் சேர்க்க குறைபாடுகள் சரியாகும்.

    பாதிப்பு அதிகமாக இருப்பின் விந்தணு எண்ணிக்கை அதிகரிக்கவும், நீந்தும் தன்மை அதிகரிக்கவும் எழுச்சி குறைபாடு சீர் செய்யவும் சிறப்பான மருந்துகள் நம் மருத்துவ முறையில் உள்ளது. மேலும் விரைப்பை, நரம்புச்சுருள் மற்றும் சில காரணிகளால் ஏற்படும் விந்தணு இல்லாமை உள்ளிட்ட நோய்களுக்கும் சித்த மருத்துவமுறை நல்ல தீர்வு அளிக்கும். எங்கள் மருத்துவமனையில் நவீன வசதிகள், ஆய்வுக்கூடம், நவீன உள் நோயாளிகள் வசதி, பிராணவாயு, தொக்கனம் வசதிகள் போன்ற பாரம்பரிய கட்டமைப்புகள், பாரம்பரிய மருந்துகள், நவீன உபகரணங்கள், படித்த அனுபவம் பெற்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கொண்டு இன்றைய கால சூழலுக்கு ஏற்ப கட்டமைத்து உள்ளோம்.

    குழந்தையின்மை தவிர ஆஸ்துமா, சைனஸ், இதய நோய்கள், சிறுநீரக கோளாறுகள், தோல் நோய்களுக்கும் சிறந்த மருத்துவம் அளிக்கப்படுகிறது. குழந்தைக்கு சித்த மருத்துவ மகளிர் மற்றும் குழந்தைகள் நல பிரிவில் பட்டம் பெற்ற மருத்துவரால் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அடுத்த தலைமுறை பக்க விளைவில்லாத நம் பாரம்பரிய மருத்துவ முறையின் வலிமையை அறியும். எங்கள் மருத்துவமனையில் நாங்கள் குழந்தைகளை உருவாக்கவில்லை. ஆரோக்கியமான பெற்றோரை உருவாக்குகிறோம்.

    டாக்டர் பிரின்சி, தலைமை மருத்துவர்.

    டாக்டர் ஜெயந்தி, மகளிர் மற்றும் குழந்தைகள் நலம்.

    டாக்டர் சுபாசினி, பொது மருத்துவர்.

    டாக்டர் வெங்கடகணபதி, பொது மருத்துவர்.

    ஓம் மரபுவழி மருத்துவமனை, 31, அருணாச்சலம் வீதி, பெரியார் சிலை அருகில், காரைக்குடி-630001. சிவகங்கை மாவட்டம்

    அலைபேசி: 9361810100, தொலைபேசி: 04565 236555/497666.

    • குழந்தையின்மை பிரச்சனை அதிகரித்து வருகிறது.
    • குழந்தையின்மைக்கு 40 சதவீத பெண்களும் காரணம்.

    குழந்தை பேறுக்கு லிஸ்டர் குழந்தையின்மை கருத்தரித்தல் மையத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்குள்ள மருத்துவ சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.ஆனந்தி அரவிந்த் ஜெர்மனியில் சிறப்பு பயிற்சி பெற்றவர். அவர் தலைமையிலான மருத்துவக்குழு சுமார் 7 ஆண்டுகளாக சிகிச்சை அளித்து வருகிறார்கள். டாக்டர் ஆனந்தி அரவிந்த் கூறியதாவது:-

    திருமணமான தம்பதிகளிடையே நாளுக்கு நாள் குழந்தையின்மை தன்மை அதிகரித்து வருகிறது. பொதுவாக திருமணமான தம்பதிகளில் சுமார் 10-15 சதவீதம் பேருக்கு குழந்தையின்மை ஏற்படுகிறது. அதற்கு 30 முதல் 40 சதவீதம் வரை ஆண்கள் காரணம் ஆகின்றனர். அவர்களுக்கு முக்கிய காரணம் உயிரணுக்களின் வேகமாக நகரும் தன்மை குறைவு (Asthenozoospermia) எண்ணிக்கை குறைபாடு ஆகும். இவற்றிற்கு மது பழக்கம், துரிதஸ்கலிதம், புகைப்பிடித்தல், போதை வஸ்துக்களை உபயோகித்தல், அம்மை, டி.பி., வலிப்புநோய், தைராய்டு நோய், சர்க்கரை நோய், சிறுநீரில் கிருமி தொற்று, கிட்னி கல் பிரச்சினை உள்ளிட்டவை முக்கிய காரணங்கள் ஆகும்.

    இவை தவிர கடுமையான தட்ப வெப்ப சூழ்நிலையில் வேலை செய்தல். பல மணி நேரம் கணினி வேலை, சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக வெயிலில் பயணம் செய்வது போன்றவைகளும் விந்தணுக்கள் உற்பத்தி மற்றும் செயல் திறனை பாதிக்கின்றது. Antis perm Antibody எனப்படும் தன் உயிரணுக்களுக்கான எதிர் உயிரி உடம்பிலேயே உற்பத்தி ஆகிய விந்தணுக்களை கொன்று விடுவதும் ஒரு காரணம் ஆகும்.

    குழந்தையின்மைக்கு 40 சதவீத பெண்களும் காரணம் ஆகின்றனர். கருமுட்டை நீர்கட்டிகள், Endometriosis கருகுழாய் டியூப் அடைப்பு மற்றும் கர்ப்பப்பையில் அடைப்பு, கட்டிகள் Uterine Anamolies. Adenomyosi போன்றவை PID எனப்படும் கர்ப்பப்பைவாய் கிருமி தொற்று குழந்தையின்மைக்கு முக்கிய காரணமாகின்றன. அதிக எடை, மாத விடாய் ஒழுங்கற்ற தன்மையில் வருவது போன்றவையும் குழந்தையின்மைக்கு காரணம் ஆகும்.

    20 சதவீதம் unexplained infertility என காரணம் கண்டறிய முடியாத பிரச்சினைகளால் குழந்தை கிடைக்காமல் போகின்றது.

    மேற்கூறிய காரணங்களை தம்பதிகளிடையே பேசி, ரத்த பரிசோதனை, அல்ட்ரா சவுண்டு ஸ்கேன், follicular study. HSG (டியுப் பரிசோதனை) Laparoscopy and hysteroscopy (நுண்துளை கர்ப்பப்பை பரிசோதனை) மூலம் பரிசோதித்து சிகிச்சை செய்ய வேண்டும்.

    இன்றைய நவீன தொழில்நுட்பம் மூலம் 90 சதவீத குழந்தையில்லா பெண்களை கருத்தரிக்க வைக்க முடியும். மாத்திரைகள், ஊசிகள், IUI மூலம் குழந்தை கிடைக்காமல் போனால் IVF (டெஸ்ட் டியூப்) அல்லது ஜெர்மன் தொழில் நுட்பத்தில் ICSI எனப்படும் சிகிச்சை மூலம் கருத்தரிக்க வாய்ப்பு உள்ளது. உயிரணுக்கள் எண்ணிக்கை 1 மில்லியன் அணுக்கள் இருந்தாலே இந்த சிகிச்சை மூலம் அணுக்களை கரு முட்டைக்குள் செலுத்தி கருத்தரிக்க செய்ய முடியும்.

    லிஸ்டர் குழந்தையின்மை கருத்தரித்தல் மையம் குமரி மாவட்டத்தில் குழந்தை பேறுக்கு தீர்வு காணும் மையமாக செயல்படுகிறது. தொடர்புக்கு செல்போன் எண்கள்: 73730 05563, 73730 05513.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இன்று ஐவிஎப் முறையால் பலர் குழந்தைப் பேறு பெற்றுப் பலனடைகிறார்கள்.
    • குழந்தைப் பேறு பெறுவதில் சிக்கல் இருக்கும் தம்பதியினருக்கு இது நல்ல வாய்ப்பாக உள்ளது.

    பல இந்திய தம்பதிகளுக்கு இடையே நாளுக்கு நாள் குழந்தையின்மை சிக்கல் அதிகரித்து வருகிறது. அவர்களுக்குக் குழந்தை பாக்கியத்தை ஏற்படுத்த இந்த IVF (ஐவிஎப்) முறை மிகச் சிறந்த வாய்ப்பாக உள்ளது. இன்று ஐவிஎப் முறையால் பலர் குழந்தைப் பேறு பெற்றுப் பலனடைகிறார்கள்! ஐவிஎப் என்பது உதவிகரமான இனப்பெருக்க தொழிற்நுட்பம் ஆகும். இது பெரும் அளவில் திருமணமானதாகிப் பல ஆண்டுகள் குழந்தைப் பேறு பெறுவதில் சிக்கல்கள் உள்ள தம்பதியினர்களுக்கு உதவியாக உள்ளது.

    ஐவிஎப் (IVF) சிகிச்சை முறை பலரைத் தாயாக ஆக்கி உள்ளது. இனியும் நம்மால் குழந்தைப் பெற முடியுமா என்று நம்பிக்கை இழந்த பெண்களுக்கும், நம்பிக்கை ஊட்டும் விதமாக இந்தச் சிகிச்சை முறை அமைந்துள்ளது. இந்தச் சிகிச்சை முறையில் மனைவியின் கரு முட்டை மற்றும் கணவனின் விந்தும் உபயோகிக்கப்படுகின்றன.

    ஐவிஎப் முறையின் நடைமுறைப்படி (IVF Procedure Step by Step) கரு முட்டை மற்றும் விந்தணு ஒரு ஆய்வக வட்டில் வைத்துக் கருத்தரிக்கப்படுகிறது. கரு குறிப்பிட்ட வளர்ச்சி அடைந்த பின் கருப்பைக்குள் வைக்கப்பட்டு முழு வளர்ச்சி அடைகிறது. கரு முட்டை மற்றும் விந்தணுவைக் கொண்டு ஆய்வகத்தில் கரு உற்பத்தி செய்யப்பட்ட பின் பெண்ணின் கருப்பைக்குள் வைத்து முழு வளர்ச்சி அடைவதால் இந்தச் சிகிச்சை முறை உறுதியான குழந்தைப் பேறு பெறுவதில் சிக்கல்கள் இருக்கும் தம்பதியினருக்கு ஒரு நல்ல வாய்ப்பாக உள்ளது. எனினும் இந்தச் சிகிச்சை முறையின் வெற்றி விகிதம் அந்தப் பெண் மற்றும் ஆண் வயது, உடல் ஆரோக்கியம், கருப்பையின் ஆரோக்கியம் ஆகியவற்றைச் சார்ந்தே உள்ளது.

    இந்தச் சிகிச்சை முறையைச் செய்து கொள்ள மனம் மற்றும் உடல் பலம் தேவை. இது ஒரு உலகளவில் வெற்றி பெற்ற சிகிச்சை முறையாகும். இந்தச் சிகிச்சை முறை நடைபெற குறைந்தது 2 வாரக் காலங்கள் எடுத்துக் கொள்ளும். இதனால் சிகிச்சை பெரும் தம்பதியினர் அவ்வப்போது மருத்துவமனைக்கு வந்து செல்ல வேண்டிய தேவை இருக்கும். பொறுமையும் திடமான மனதும் இந்த சிகிச்சையில் வெற்றி பெற பெரிதும் அவசியம்.

    ஐவிஎப் சிகிச்சை முறையின் வெற்றி பெரும் விகிதம்

    அனைத்து வயது பெண்களும் இந்தச் சிகிச்சை முறையை முயலலாம் என்றாலும் அதன் வெற்றி பெரும் விகிதம் அவர்களது தற்போதைய வயது, உடல் மற்றும் மனதின் ஆரோக்கியத்தின் அளவைக் கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது. அதை நீங்கள் தெரிந்து கொள்ள இங்கே சில குறிப்புகள்:

    35 வயதிற்குள் இருக்கும் பெண்களின் வெற்றி விகிதம் 41% - 43%

    35 - 37 வயதிற்குள் இருக்கும் பெண்களின் வெற்றி விகிதம் 33% - 36%

    38 - 40 வயதிற்குள் இருக்கும் பெண்களின் வெற்றி விகிதம் 23% - 27%

    40 வயதிற்கு மேல் இருக்கும் பெண்களின் வெற்றி விகிதம் 13% -18%

    • கர்ப்பிணிகள் தான் எந்த உணவைச் சாப்பிட வேண்டும் தெரிந்து கொள்ள வேண்டும்.
    • எந்த உணவுகளை தொடவே கூடாது என்பது பற்றி அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    கர்ப்ப காலம் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு அழகிய பயணமாகவே இருக்கும். கர்ப்பிணி பெண்ணுக்கு தான் எந்த உணவைச் சாப்பிட வேண்டும்,

    எந்த அளவு உணவு எடுத்துக் கொள்ள வேண்டும், எந்த உணவுகளை தொடவே கூடாது என்பது பற்றியெல்லாம் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாமல் தனக்கும், தன் உடலில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் தேவையான ஊட்டச் சத்துக்கள் என்ன, எவ்வளவு கலோரிகள் அளவு இந்த ஊட்டச் சத்துக்கள் தேவைப்படும், அவை எந்த உணவுகளில் கிடைக்கும் என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.

    கர்ப்ப காலத்தில் ஒரு பெண் தான் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் சுமார் 2200 கலோரி அளவிலான உணவைத் தாண்டி, 300 கலோரிகள் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த கலோரிகள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கும், வளர்ச்சிக்கும் அவசியம். இந்த கலோரிகளை நல்ல சத்து நிறைந்த உணவுகள் மூலம் கிடைக்கப் பெற வேண்டும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

    * Green leaves – கீரை வகைகள்

    * Green vegetables – பச்சைக் காய்கறிகள்

    * Grains – முழு தானியங்கள்

    * முழு தானியங்கள் என்றால் அதிகம் பாலிஷ் போடாத கோதுமை மற்றும் அரிசி சாதம், கஞ்சி போன்றவை நல்லது. புழுங்கலரிசி உபயோகிப்பது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. மல்லிகைப் பூ போன்ற பச்சரிசி சாதம், சத்தில்லாத சக்கைதான். அதிக refine செய்யப்பட்ட ஆட்டா, மைதா போன்றவற்றில் இயற்கையான நார்ச்சத்து இருக்காது.

    * அதிக காரம், மசாலா பொருட்களைத் தவிர்ப்பது நல்லது. கருவுற்ற தாய் நிறையப் பழங்கள் சாப்பிட வேண்டும். இது மலச்சிக்கலைத் தவிர்க்கும். அன்னாசி, பப்பாளி போன்றவை உடலுக்கு நல்லது. அவை சினிமாவிலும் டிவி மொகா தொடர்களிலும்தான் அபார்ஷனை ஏற்படுத்தும்.

    * தினமும் அரை லிட்டர் அளவு பால் குடிப்பது கருவில் உள்ள குழந்தையின் எலும்புகளுக்கு கால்சியம் சத்தை சேர்த்து அவற்றை உறுதிப்படுத்தும். கருவுற்ற முதல் சில மாதங்களுக்கு வாந்தி, மயக்கம் இருக்கலாம். சிலருக்கு அதிகமாக இருக்கும். அச்சமயம் பழ ஜூஸ், வேகவைத்த காய்கறிகள், கஞ்சி வகைகளை அடிக்கடி சாப்பிடலாம்.

    * கருவுற்ற தாய்க்கு நாக்கில் ருசி மாறும். அதனால்தான் சாம்பல் ருசிக்கிறது. மனத்துக்குப் பிடித்த உணவுகளை வீட்டிலேயே தயாரித்துச் சாப்பிடலாம். எள் உருண்டை, கடலை உருண்டை, பொட்டுக் கடலை உருண்டை போன்றவற்றில் உள்ள வெல்லம் இரும்புச் சத்தை தரும். கடலை, எள்ளு ஆகியவற்றில் உடலுக்கு மிகவும் தேவையான கொழுப்பு அமிலங்கள் (Essential Fatty Acids) உள்ளன. எள், கருச்சிதைவை ஏற்படுத்தாது.

    பிறவிக்குறைபாடுகளுடன் பிறந்த குழந்தைகளை எவ்வாறு கண்டறிவது? அதற்குரிய சிகிச்சை முறைகள் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    தினாறு செல்வங்களில் மக்கட்பேறு என்பது பெரும் செல்வம். அத்தகைய மக்கட்பேறு எனும் குழந்தை செல்வம் கிடைக்கப்பெறாதவர்களிடம் கேட்டால் தான் அதன் அருமை தெரியும் என்று பெரியவர்கள் கூறுவார்கள். இத்தகைய சிறப்பு பெற்ற குழந்தை பாக்கியம் கிடைத்தும், அவ்வாறு கிடைத்த குழந்தை ஏதோ ஒருவித பிறவிக்குறைபாடுகளுடன் பிறந்தால் அது வாழ்வில் பெரும் சோகத்தை ஏற்படுத்தும்.

    இவ்வாறு பிறவிக்குறைபாடுகளுடன் பிறந்த குழந்தைகளை எவ்வாறு கண்டறிவது? அதற்குரிய சிகிச்சை முறைகள் பற்றி காண்போம். இதுகுறித்து திண்டுக்கல் அரசு மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவு டாக்டர் விக்னேஷ் கூறியதாவது:-

    குழந்தையின் வளர்ச்சி

    குழந்தை பிறந்தநாளில் இருந்து 2 வயதுக்குள் அதன் வளர்ச்சி சரியாக இருக்க வேண்டும். அதாவது குழந்தை பிறந்தநாளில் இருந்து 3 மாதத்தில் தாயின் முகம் பார்த்து சிரிக்கவும், 5 முதல் 6 மாதத்தில் அதன் தலை நிற்கவும் வேண்டும். 7 மாதத்துக்குள் குழந்தை குப்புற விழ வேண்டும். 9-வது மாதத்தில் எதையாவது பிடித்து உட்கார வேண்டும். 1 வயதில் தானாக எழுந்து நிற்க வேண்டும். 1½ வயதில் நடக்க வேண்டும். 2 வயதில் படிக்கட்டுகளில் ஏறி, இறங்க வேண்டும்.

    அதேபோல் குழந்தை பிறந்த 6 மாதத்தில் பேச முயற்சிக்க வேண்டும். அதற்கான அடையாளமாக அது சத்தம் எழுப்ப ஆரம்பிக்கும். 9-வது மாதத்தில் அம்மா, தாத்தா, மாமா என சொல்ல முயற்சிக்கும். 2 வருடத்தில் ஒரு சொல் வார்த்தைகளை பேசும். 3 வருடத்தில் இரண்டு சொல் வார்த்தைகளை பேச வேண்டும்.

    இதுதான் குழந்தையின் சராசரி வளர்ச்சி ஆகும். மேற்குறிப்பிட்ட கால அளவுகளில் ஒன்றிரண்டு மாதங்கள் வித்தியாசப்படலாம். ஆனால் அதன் வளர்ச்சியில் இவை அனைத்தும் நடந்திருக்க வேண்டும். இதுவே குழந்தை ஆரோக்கியமாக உள்ளது என்பதற்கான அடையாளம் ஆகும்.

    இருதய வளர்ச்சி

    பொதுவாக குழந்தை வயிற்றில் உருவாகும் போதே, அதன் பிறவிக்குறைபாடுகளும் உருவாகி விடுகின்றன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இருதயம் 4 பகுதிகளாக வளர்ந்து அதன்பிறகு ஒன்றாக சேரும். அதன்பிறகுதான் முழு இருதயம் தோன்றும். அவ்வாறு தோன்றும் இருதயத்தில், அது உருவாகும் போதே அதில் ஓட்டை விழ வாய்ப்பு உண்டு.

    அவ்வாறு தானாக விழும் ஓட்டையில் 2 வகை உள்ளது. முதல் வகை ஓட்டை குழந்தை பிறந்த 24 மணி நேரம் முதல் 72 மணி நேரத்துக்குள் தானாகவே அடைத்துவிடும். 2-வது வகை ஓட்டை என்பது, குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தோன்றுவது. இது எவ்வளவு நாள் குறைவாக பிறந்ததோ அவ்வளவு நாட்களோ அல்லது அதற்கு மேலும் சில நாட்களோ இருதயம் வளர்வதற்கு எடுத்துக்கொள்ளும்.

    பிறவிக்குறைபாடு

    பிறவிக்குறைபாட்டால், இருதயத்தில் ஓட்டை விழுதல், உதடுபிளவு ஏற்படுதல், வாய்க்குள் மூக்கின் அடியில் ஓட்டை தோன்றுதல், (அவ்வாறு மூக்கிற்குள் ஓட்டை விழுந்த குழந்தை பால் குடித்தால், பால் மூக்கின் வழியாக வெளியே வந்து விடும்.) காது கேளாமை, கண்புரை, இடுப்பு மூட்டு விலகுதல், கால் நேராக இல்லாமல் வளைந்து இருத்தல், முதுகு தண்டில் ஓட்டை விழுதல் அல்லது முதுகு தண்டில் பிளவு ஏற்படுதல், கட்டி தோன்றுதல் போன்றவை பிறவிக்குறைபாடுகள் ஆகும்.

    இதில் நரம்பு சம்பந்தமான பிரச்சினைகளும் உண்டு. மேற்கூறிய பல பிரச்சினைகளில் பெரும்பாலானவை சரி செய்யக்கூடியது.

    சிகிச்சைகள்


    கண் சம்பந்தமான பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து விட்டால் 100 சதவீதம் அதனை சரி செய்து பார்வையை பெறலாம். காது கேளாமை பிரச்சினையை 3 மாதத்திலேயே கண்டறிய முடியும். அவ்வாறு கண்டறிந்தால் அதனையும் சரி செய்யலாம். இடுப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினையை ஒரு வருடம் தொடர்ந்து கட்டு போடுவதன் மூலம் சரி செய்யலாம்.



    அதேபோல் முதுகுதண்டு பிரச்சினை மற்றும் முதுகுதண்டில் கட்டி போன்றவற்றை அறுவை சிகிச்சை செய்து சரி செய்யலாம். இதுபோன்ற முதுகுதண்டுவட பிரச்சினை உள்ள குழந்தைகளுக்கு சிறுநீரை அடக்கும் சக்தி இருக்காது. சொட்டு, சொட்டாக சிறுநீர் விழுந்து கொண்டே இருக்கும். இதுதவிர கால் செயல் இழக்கவும் வாய்ப்பு உண்டு. குழந்தை பிறந்த முதல் 3 மாதத்துக்குள் இந்த பிரச்சினையை கண்டறிந்து விட்டால் முற்றிலும் இதனை சரி செய்யலாம்.

    பேச்சு, மூச்சின்றி...

    சில குழந்தைகள் பிறக்கும்போது அழாமல் இருக்கும். அதற்கு பேச்சு, மூச்சு இருக்காது. அதுபோன்று இருந்தால் அந்த குழந்தைக்கு ஒரு வாரத்தில் மஞ்சள் காமாலை நோய் தாக்க வாய்ப்புண்டு. சில குழந்தைகளுக்கு பிறக்கும் போதே வலிப்பு வந்து விடும். எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளுக்கு இதுபோன்ற பிரச்சினைகள் வர வாய்ப்புண்டு.

    அதனால் குழந்தை எடை குறை யாமல் இருக்க வேண்டும். பிறக்கும் போதே குழந்தை 2½ கிலோவுக்கு மேல் 3 கிலோ 900 கிராமுக்கும் குறைவாக இருக்க வேண்டும். 4 கிலோவும் அதற்கு மேலும் குழந்தையின் எடை இருப்பது நல்லதல்ல.

    அதிக எடை உள்ள குழந்தை

    அவ்வாறு 4 கிலோவுக்கும் அதிக எடை உள்ள குழந்தைகளை எல்.ஜி.ஏ. குழந்தை என்று மருத்துவம் கூறுகிறது. தாய்க்கு கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் இருந்தாலும் இதுபோன்ற உடல் பருமனுள்ள குழந்தை பிறக்க வாய்ப்பு உண்டு. இவ்வாறு அதிக எடை கொண்ட குழந்தைகளுக்கு இருதய கோளாறு, முதுகுதண்டில் பிரச்சினைகள் இருக்க வாய்ப்புண்டு.

    அதேபோல் கர்ப்ப காலத்தில் தாய்க்கு தைராய்டு பிரச்சினை இருந்தால் பிறக்கும் குழந்தைக்கும் தைராய்டு கோளாறு வர வாய்ப்புண்டு. அதனால் இதுபோன்ற தைராய்டு பிரச்சினை குழந்தைக்கு உள்ளதா? என கண்டறிந்து அதனை சரி செய்ய வேண்டும்.

    பெற்றோர்களுக்கு...

    பொதுவாக பிறவிக்குறைபாடுகளை கண்டறிய பெற்றோர்களுக்கு அதற்குரிய பக்குவம் அவசியம் வேண்டும். பெற்றோர்களில் பலர் குழந்தையின் வளர்ச்சிநிலை குறைகளை கண்டறியும் பக்குவம் இன்றி உள்ளனர். குழந்தை பிறந்த 3 மாதங்களில் தாயின் முகம் பார்த்து சிரிக்கவில்லையென்றால் அந்த குழந்தைக்கு ஏதோ பிரச்சினை உள்ளது என்று அர்த்தம்.

    அதனால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். மேலும் மேற்கூறிய 2 வருடத்துக்குள் குழந்தையின் வளர்ச்சி நிலையில் ஏதேனும் மாறுபாடு தோன்றினாலும் உடனே டாக்டரை அணுகி சிகிச்சை எடுக்க வேண்டும்.

    எதற்கெடுத்தாலும் சிலர் எங்களது பரம்பரையில் பிறந்த குழந்தைகள், தாமதமாகத்தான் குப்புற விழும், எழுந்து நிற்கும், நடக்கும், பேசும் என்று பெருமையாக கூறுவார்கள். அது முற்றிலும் தவறு. குழந்தையின் வளர்ச்சி நிலையில் அந்தந்த மாதத்தில் அது சிறப்பான வளர்ச்சியை பெற வேண்டும்.

    இல்லையெனில் வளர்ச்சி நிலையில் ஏதேனும் பிறவிக்குறைபாடு கூட இருக்கலாம். அதனால் டாக்டரிடம் சென்று குழந்தையை பரிசோதனைக்கு உட்படுத்துவது நல்லது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 
    ×